Search This Blog

Friday, July 25, 2014

Jeera Rice

#சீரகசாதம் : சீரக சாதம் எளிமையாகவும் மிக சுலபமாகவும் செய்ய கூடியது. நான் வசிக்கும் ராய்ப்பூரில் மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகியவற்றில் பூரி அல்லது ரொட்டியுடன் சீரக சாதமே பரிமாறப்படுகிறது.

இந்த சீரக சாதத்தின் மேல் பருப்பு விட்டு சாப்பிடுகிறார்கள்.
இனி எவ்வாறு செய்வது என காணலாம்.

சீரக சாதம்

தேவையான பொருட்கள் :
1/2 கப்                                      பாசுமதி அரிசி அல்லது பச்சரிசி
1 Tsp                                         சீரகம்
1                                               அன்னாசி மொக்கு
1                                               ப்ரிஞ்சி இலை
1 அங்குல                            இலவங்க பட்டை துண்டு
1 Tbsp                                      பச்சை பட்டாணி [ இருந்தால் ]
2 Tsp                                        நெய் அல்லது எண்ணெய்
1 Tsp                                        வெள்ளை மிளகுத்தூள் [ விரும்பினால் ]

செய்முறை :

அரிசியை ஒரு முறை கழுவி நீரை வடித்து விட்டு நல்ல தண்ணீரில் ஊற வைக்கவும்.

அடுப்பில் குக்கரை வைத்து நெய் விட்டு சூடாக்கவும்.
சீரகத்தை முதலில் வெடிக்க விடவும்.
பின்னர் மற்ற வாசனை பொருட்களை போட்டு வறுக்கவும்.

ஊறிக்கொண்டிருக்கும் அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து விட்டு குக்கரில் சேர்க்கவும்.

சிறிது நேரம் வறுக்கவும். நன்கு வெள்ளை நிறமாக அரிசி மாறியவுடன் பட்டாணியை சேர்க்கவும்.

தேவையான அளவு உப்பு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும்.
கரண்டியால் நன்கு கலக்கிய பின்னர் மூடி வெயிட் பொருத்தவும்.

அதிக தீயில் 3 விசில் வரும் வரையும், பின்னர் சிறிய தீயில் 3 நிமிடங்கள் வரையும் வேக விடவும்.
அடுப்பை அணைத்து விடவும்.

நீராவி முழுவதுமாக வெளியேறும் வரை காத்திருக்கவும்.
இதற்கு சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் ஆகும்.

சீரக சாதம்

பின்னர் திறந்து மிளகு தூளை சேர்த்து கரண்டியால் கிளறி பரிமாறும் தட்டில் எடுத்து வைக்கவும்.
இங்கு சுரைக்காய் மோர் குழம்புடன் பரிமாறப் பட்டுள்ளது.

சீரக சாதம்

தங்களுக்கு விருப்பமான குருமா அல்லது பன்னீர் மசாலாவுடனும் சுவைக்கலாம்.




No comments:

Post a Comment