Search This Blog

Tuesday, December 27, 2016

Chowchow-Adai

#சௌசௌஅடை : #அடை செய்வதற்காக மாவு தயார் செய்துவிட்டு சுரைக்காய் வாங்குவதற்காக காய்கறி கடைக்கு சென்றேன். ஆனால் கடையில் மிகவும் பெரிய அளவு சுரைக்காயே இருந்தது. அவ்வளவு பெரிய காய் அடை செய்ய தேவைப்படவில்லை. அதனால் வேறு என்னென்ன காய்கள் கடையில் இருக்கிறதென பார்த்தேன். #சௌசௌ கண்ணில் பட்டது. அதனை வாங்கி வந்து பொடிப்பொடியாக நறுக்கி மாவில் சேர்த்து அடை செய்தேன். மிகவும் பிரமாதமாக இருந்தது. யாராலுமே கண்டுபிடிக்க இயலவில்லை!! அந்த அற்புத சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக..

சுமார் 4 - 5 அடைகள் தயாரிக்கலாம்.

Chowchow Adai


தேவையானவை :
ஊற வைக்க :
1/4 கப்புழுங்கரிசி [ இட்லி அரிசி ]
1/4 கப்பச்சரிசி
1/4 கப்துவரம் பருப்பு
1/4 கப்கடலை பருப்பு
அரைக்க :
1/2 Tspபெருங்காயத்தூள்
1 Tspசோம்பு
1 Tspசீரகம்
1/2 அங்குலஇஞ்சி துண்டு
2 - 3சிகப்பு மிளகாய் [ அட்ஜஸ்ட் ]
1 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
மாவுடன் சேர்க்க :
1 சௌ சௌ, தோல் நீக்கி பொடியாக நறுக்கவும் 
1 நடுத்தரவெங்காயம், பொடியாக நறுக்கவும்
4 Tspகொத்தமல்லி தழை நறுக்கியது
10 - 12கருவேப்பிலை, கிள்ளி வைக்கவும்

அடை சுட தேவையான நல்லெண்ணெய்
அடை மேலே தடவ தேவையான நெய் அல்லது வெண்ணெய்.

செய்முறை :
அரிசி இரண்டையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து இரு முறை கழுவி விட்டு ஊற வைக்கவும்.
பருப்பு அனைத்தையும் ஒன்றாக வேறொரு பாத்திரத்தில் எடுத்து கழுவிய பின்னர்  ஊறவைக்கவும்.
சுமார் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

2 மணி நேரம் கழித்து கொடுக்கப்பட்டுள்ள அரைக்க தேவையான மற்ற பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் விடாமல் கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
பின்னர் அதனுடன் அரிசியை சேர்த்து அரைத்து எடுத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.
பின்னர் பருப்பு ஊறவைத்த தண்ணீர்  முழுவதும் வடித்து விட்டு மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து முன்பு அரைத்து வைத்துள்ள அரிசியுடன் சேர்க்கவும்.
நன்கு கலக்கி விடவும்.
அவற்றுடன் மாவுடன் சேர்க்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கலக்கவும். உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
அடுப்பை  பற்ற வைத்து  கல்லை சூடாக்கவும்.
சூடானதும் எண்ணெய் சுற்றி விட்டு மாவை கரண்டியால் எடுத்து தோசை கல்லின் நடுவே வைத்து சமமாக பரப்பவும்.
அடை என்பதால் சிறிது கனமாக இருக்க வேண்டும்.
மேலேயும் சுற்றியும்  எண்ணெய் விட்டு ஒரு மூடியால் மூடி 2 அ 3 நிமிடங்கள் வேக விடவும்.
பின்னர் திறந்து பார்க்கவும்.
ஓரங்கள் சிவந்தவுடன் திருப்பிப் போட்டு வேக விடவும்.
இரு  பக்கமும் நன்கு  சிவந்த வுடன் எடுத்து தட்டில் வைக்கவும்.

இதே போல ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கவும்.
சுவையான சௌசௌ அடை தயார்.
அடையை தட்டில் வைத்து மேலே வெண்ணெய் அல்லது நெய் தடவி சூடாக  அவியல் வைத்து பரிமாறவும்.

Chowchow Adai Chowchow Adai





முயற்சி செய்து பார்க்க மேலும் சில சமையல் குறிப்புகள் 

வாழைப்பூ பருப்பு உருண்டை
வாழைப்பூபசலைஅடை
பெசரட்டு
பெசரட்டு
அடை
அடை
முடக்கத்தான் கீரை தோசை
முடக்கத்தான் தோசை
கொடி பசலை கீரை தோசை
பசலை கீரை தோசை






Tuesday, December 20, 2016

Curry-Leaf-Tomato-Chutney

#கருவேப்பிலைதக்காளிசட்னி : #கருவேப்பிலை [ #கறிவேப்பிலை ] நமது தமிழகத்து சமையலில் மிக முக்கிய இடம் வகிக்கிறது. நாம் அருந்தும் டீ மற்றும் காபி தவிர மற்ற அனைத்து உணவிலும் இந்த அற்புத இலை இல்லாமல் செய்யப்படுவது இல்லை. நாம் இதை வாசனைக்காக மட்டுமல்ல, முக்கிய சத்துக்களுக்காகவும் பயன் படுத்துகிறோம். கருவேப்பிலையை கிள்ளி போட்டு சமையலில் பயன் படுத்தும் போது நம்மில் பலர் அதை ஒதுக்கி வைத்துவிட்டு உண்கிறோம். ஆக பல மருத்துவ குணங்கள் அடங்கிய கருவேப்பிலையை சட்னி செய்ய உபயோகப்படுத்தப்படும் போது நன்கு அரை பட்டுவிடுவதால் நாம் முழு பலனை அடையலாம்.
இங்கு கருவேப்பிலையை மிகுதியாக உபயோகப்படுத்தி தக்காளியுடன் சேர்த்து செய்யக்கூடிய ஒரு சட்னி செய்முறையை காணலாம்.


தேவையானவை :
1/4 கப்கருவேப்பிலை
தக்காளி 
10 - 12சின்ன வெங்காயம்
6 - 8பச்சை மிளகாய்
1 Tspஎலுமிச்சை சாறு [ அட்ஜஸ்ட் ]
1 1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
1/2 Tspஎண்ணெய்
தாளிக்க :
1/2 Tspஎண்ணெய்
1/2 Tspகடுகு
1/2 Tspஉளுத்தம் பருப்பு
4 - 6கருவேப்பிலை
செய்முறை :
கருவேப்பிலையை தண்ணீரில் நன்கு கழுவி தனியே வைக்கவும்.
மைக்ரோவேவில் பயன்படுத்தக்கூடிய பீங்கான் பாத்திரத்தில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை எடுத்துக்கொள்ளவும்.
கால்  தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலந்து விடவும்.
மைக்ரோவேவின் உள்ளே வைத்து ஹையில் அரை நிமிடம் சூடு படுத்தவும்.
வெளியே எடுத்து அதே பீங்கான் பாத்திரத்தில் வெட்டி வைத்துள்ள தக்காளி சேர்த்து மேலும் கால் தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலந்து விடவும்.
மீண்டும் மைக்ரோவேவ் ஹையில் தக்காளி வேகும்வரை சூடாக்கவும்.
வெளியே எடுத்து வைத்து ஆற விடவும்.
ஆறிய பின்னர் வதங்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, கழுவி வைத்துள்ள கருவேப்பிலை, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு அனைத்தையும் மிக்சி பாத்திரத்தில் போட்டு நன்கு அரைத்தெடுக்கவும்.
தேவையெனில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சரி பார்த்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகை வெடிக்க விட்ட பின் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும்.
அடுப்பை அணைத்து விட்டு கருவேப்பிலையை கிள்ளி போட்டு தாளித்து சட்னியின் மேல் கொட்டவும்.

சுவையான கருவேப்பிலை நறுமணம் கூடிய சட்னி தயார்.
ஆப்பம், &  தோசை

நீர் தோசை,  &  கஞ்சி தோசை போன்றவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
காரம் அதிகமாக இருப்பதால் சட்னியின் மேல் நல்லெண்ணெய் ஊற்றி தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் மிக மிக அருமையாகவும் ருசியாகவும் இருக்கும்.

  • அவரவர் காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாயின் அளவை கூட்டி குறைத்துக்கொள்ளவும்.
  • மைக்ரோவேவ் இல்லையெனில் வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை தனித்தனியே வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
  • எலுமிச்சை சாற்றிற்கு பதிலாக புளியையும் உபயோகிக்கலாம்.
  • கருவேப்பிலையின் அளவையும் அவரவர் விரும்பம்போல் எடுத்துக்கொள்ளலாம்.


சில சட்னி வகைகளின் சமையல் குறிப்புகள் :

  • கீழே உள்ள படங்களின் மேல் அம்புக்குறியை காட்டினால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்து கொள்ளலாம்
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் சமையல் குறிப்பின் பக்கத்திற்கு செல்லலாம்

பூண்டு மிளகாய் சட்னி பூண்டு தக்காளி சட்னி வெங்காயம் தக்காளி சட்னி
கொத்தமல்லி தேங்காய் சட்னிநெல்லிக்காய் புதினா துவையல்





இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ப்ளாகர், ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.