Search This Blog

Wednesday, April 20, 2016

Katharikkai-Chutney

#கத்தரிக்காய்சட்னி : #கத்தரிக்காய் கொண்டு சாம்பார் செய்வது போன்றே இந்த சட்னியும் ஆகும். ஆனால் பருப்பு இல்லாமல் செய்யப்படுகிறது. குக்கரில் கத்தரிக்காயை வேக வைத்து நன்கு மசித்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கறுவேப்பிலை ஆகியவற்றை வதக்கவும். மசித்த கத்தரிக்காயுடன் சாம்பார் பொடி, மல்லி பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கிய பொருட்களை   சேர்க்க வேண்டும். அதில் புளி கரைசல் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு மூடி வெயிட் பொருத்தி ஒரு விசில் வரும் வரை வேக விடவும். ஆவி அடங்கியவுடன் குக்கரை திறந்து எடுத்தால் கத்தரிக்காய் சட்னி தயார்.
இதே போல பீர்கங்காய் மற்றும் கருணை கிழங்கு உபயோகித்தும் செய்யலாம்.


katharikkai chutney


தேவையானவை :
2 பெரிய அளவு கத்தரிக்காய்
நெல்லிக்காய் அளவு புளி
1வெங்காயம், பொடியாக நறுக்கவும்
10 - 12சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கவும்
2 - 3பச்சை மிளகாய்
10 - 12கறுவேப்பிலை
1/2 Tspகடுகு
1/4 Tspபெருங்காய தூள்
1 Tspகடலை எண்ணெய்
1 1/2 Tspஉப்பு [ adjust ]
2 pinchesமஞ்சத்தூள்
2 Tspசாம்பார் பொடி
1 Tspஅரைத்துவிட்ட குழம்பு தூள்
1 Tspகொத்தமல்லித்தூள்

சிறிது கொத்தமல்லி தழை அலங்கரிக்க

செய்முறை :
கத்தரிக்காயை நன்கு கழுவிய பின்னர் துண்டுகளாக வெட்டி குக்கரில் போடவும்.
அரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை மஞ்சத்தூள் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
வெயிட்டை சிறிது சிறிதாக தூக்கியோ அல்லது தண்ணீர் குழாயின் அடியில் வைத்து தண்ணீரை ஊற்றியோ உடனே ஆவியை வெளியேற்றவும்.
மசிக்கும் கரண்டி கொண்டு நன்கு மசித்து விடவும்.
நன்கு மசித்த பின்னர் மஞ்சத்தூள், சாம்பார் பொடிஅரைத்துவிட்ட குழம்பு தூள், மற்றும் கொத்தமல்லித்தூள் சேர்க்கவும்.
அடுப்பை பற்ற வைத்து குக்கரை மிதமான தீயில் க்சூடாக்கவும்.

மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விட்ட பின்னர் பெருங்காயத்தூள், கருவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய வெங்காயம் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். வெங்காயம் சிறிது வாசனை வரும் வரை வதக்கினால் போதும்.
அடுப்பை அணைத்து விட்டு வதக்கியவற்றை கொதிக்கும் கத்தரிக்காய் கலவையில் கொட்டவும்.

புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி குக்கரில் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் பொருத்தி தீயை அதிகப்படுத்தி இரண்டு விசில் வரும் வரை வைத்திருக்கவும்.
ஆவி அடங்கியபின் திறந்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
சிறிது கறுவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும்.
இட்லி மற்றும் தோசை உடன் தொட்டுக்க வும் நன்றாக இருக்கும்.

katharikkai chutney




மேலும் சில உணவு குறிப்புகள் முயற்சி செய்து பார்த்து ருசிக்க
வெங்காய சாம்பார்
வெங்காய சாம்பார்
தக்காளி சட்னி
தக்காளி சட்னி
வாழைப்பூ குழம்பு
வாழைப்பூ குழம்பு
வெண்டைக்காய் தக்காளி கறி
வெண்டைக்காய் தக்காளி கறி
அவியல்
அவியல்


இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பெட்டியின் வழியாக முகநூல், ட்விட்டர், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.

No comments:

Post a Comment