Search This Blog

Wednesday, April 29, 2015

Chola-Appam

#சோளஆப்பம் : இப்போது நான் வசிக்கும் வட கர்நாடகாவில் #சோளம் அதிக அளவில் உபயோகப்படுத்துகிறார்கள். நானும் சோளம் உபயோகித்து சோள இட்லி, சோள தோசை, மற்றும் குழி பணியாரம் செய்து பார்த்தேன். மிக மிக ருசியாக இருந்தது. அதனால் அடுத்து ஆப்பம் செய்து பார்த்தேன். ஆப்பமும் நன்றாக செய்ய முடிந்தது.
இட்லி அரிசி, பச்சரிசி, சோளம் ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்துகொள்ள வேண்டும். வெந்தயம் மற்றும் உளுத்தம் பருப்பு - துவரம் பருப்பு ஆகியவற்றை தனியாக ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு மாவரைக்கும் இயந்திரத்தில் தனித்தனியாக அரைத்தெடுத்து உப்பு சேர்த்து கலந்து புளிக்க வைக்க வேண்டும். புளித்த பின்னர் தோசை கல்லிலோ அல்லது ஆப்ப சட்டியிலோ ஆப்பம் சுட்டெடுக்க வேண்டும்.

*வெந்தயத்தை முதல் நாளே ஊறவைத்து முளை கட்டியும் சேர்க்கலாம்.

இங்கு இப்போது சோள ஆப்பம் செய்முறையை காண்போம்.

தோராயமாக 25 முதல் 30 ஆப்பம் தயார் செய்யலாம்.

சோள ஆப்பம்

தேவையான பொருட்கள் :
1 கப்இட்லி அரிசி
1 கப்சோளம்
2 கப்பச்சரிசி
1/8 கப்உளுத்தம் பருப்பு
1/8 கப்துவரம் பருப்பு
1/8 கப்வெந்தயம்
4 Tspஉப்பு
செய்முறை :
வெந்தயத்தை ஒரு சிறு கிண்ணத்தில் எடுத்து கழுவி விட்டு 6 முதல் 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
வெந்தயம் ஊற வைத்து 3 அல்லது 4 மணி நேரம் கழித்து இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் சோளம் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
நன்கு கழுவிய பின்னர் தேவையான தண்ணீர் விட்டு 3 மணி நேரம்  ஊறவைக்கவும்.
அதே போல மற்றொரு பாத்திரத்தில் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளவும்.
நன்கு கழுவிய பின்னர் தேவையான தண்ணீர் விட்டு 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
குறிப்பிட்ட நேரம் ஊறிய பின்னர் கிரைண்டரை கழுவி முதலில் வெந்தயம் மற்றும் மற்ற இரண்டு பருப்பையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். ஊறவைத்த தண்ணீரையும் அரைக்கும் போது சேர்க்கவும்.
அவ்வப்போது தண்ணீர் தெளித்து நன்கு பந்து போல உப்பி வரும் வரை அரைத்து எடுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அடுத்து அரிசி மற்றும் சோளத்தை நன்கு மைய அரைக்கவும். வழிப்பதற்கு முன் 4 Tsp உப்பு சேர்த்து விடவும்.
இந்த மாவை வழித்து முன்பு பருப்பு-வெந்தயம் மாவு எடுத்து வைத்துள்ள அதே பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அரை கப் தண்ணீர் விட்டு மாவரைக்கும் இயந்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாவை கழுவி பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.
கையினால் நன்கு கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
அல்லது முதல் நாள் மாலை அல்லது இரவு அரைத்து மறு நாள் காலை ஆப்பம் ஊற்றலாம்.

ஆப்ப மாவு புளித்த பிறகு அடுப்பில் மிதமான சூட்டில் தோசை கல்லை சூடாக்கவும்.
ஒரு சுத்தமான துணியினால் எண்ணெய் தடவி சூடானதும் நடுவில் மாவை வைத்து பரப்பி விடவும்.
ஒரு மூடியினால் மூடி வேக விடவும்.
ஆப்பத்தை திருப்பிப் போட்டு வேக விட வேண்டாம்.
இலேசாக சிவந்து வெந்த ஆப்பத்தை தட்டில் எடுத்து வைக்கவும்.
அடுத்த ஆப்பம் சுட முன்பு போலவே எண்ணெய் தடவி ஆப்பம் சுட்டு எடுக்கவும்.
சூடாக இருக்கும் போதே தேங்காய் சட்னி அல்லது பூண்டு மிளகாய் சட்னி அல்லது வெல்லம் சேர்த்த தேங்காய் பால் தொட்டுக்கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

சோள ஆப்பம் சோள ஆப்பம்
குறிப்பு :
*வெந்தயத்தை முளை கட்ட,
மாவு அரைப்பதற்கு முதல் நாள் மாலை அல்லது இரவே வெந்தயத்தை கழுவி ஒரு கிண்ணத்தில் ஊற வைக்கவும்.
அரைக்கும் நாள் காலையில் ஊறிய தண்ணீரை வேறொரு சிறிய கிண்ணத்தில் வடித்தெடுத்து விடவும். ஊற வைத்த  தண்ணீரை கீழே கொட்டி விட வேண்டாம். மாவு அரைக்கும் போது சேர்த்து விடலாம்.
இப்போது ஊறிய வெந்தயத்தை முளைக்கட்டுவத ற்காக ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.



முயற்சி செய்து பார்க்க
ஆப்ப மாவு
ஆப்ப மாவு
ஆப்பம் சுடும் முறை
ஆப்பம் சுடும் முறை
ஆப்பம் கேரளா ஸ்டைல்
ஆப்பம் கேரளா 1
ஆப்பம் கேரளா ஸ்டைல் 2
ஆப்பம்கேரளா 2

ஆப்பத்துடன் தொட்டுக்கொண்டு சுவைக்க

தொட்டுக்க



Thursday, April 23, 2015

Samai-Bisibelebath

#சாமைபிசிபெளேபாத்  #சாமைசாம்பார்சாதம் : #சாமைஅரிசி சுருக்கமாக #சாமை #சிறுதானியம் வகைகளில் மிகவும் அளவில் சிறியது ஆகும். ஆனாலும் இதில் விட்டமின்களும் தாதுக்களும் அதிகமாக நிறைந்துள்ளன. இரும்பு சத்தும் துத்தநாக சத்தும் மிக அதிக அளவில் நிறைந்து உள்ளது. அரிசியை சமையலுக்கு உபயோகிப்பது போலவே எல்லா வகையான சமையலிலும் சாமையையும் பயன் படுத்தலாம்.
இங்கு கர்நாடகத்தில் #பிசிபெளேபாத், அதாவது சாம்பார் சாதம் மிகவும் பிரசித்தம். கல்யாணம் மற்றும் பிற விருந்துகளில் பிசிபெளேபாத் கட்டாயமாக இடம் பெற்றிருக்கும்.
நான் பொதுவாக சாதம் மற்றும் பருப்பை ஒன்றாக ஒரு குக்கரிலும் சாம்பாரை மற்றொரு குக்கரிலும் செய்த பின்னர் ஒன்றாக கலந்து தாளித்து கொட்டி சாம்பார் சாதம் செய்வது வழக்கம். எனது மகள் எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து ஒரே குக்கரிலேயே செய்ய கற்றுக் கொடுத்தாள். அவ்வாறே சென்ற வாரம் சாமை அரிசியில் பிசிபெளேபாத் [ சாம்பார் சாதம் ] செய்தேன். மிக மிக அருமையாக இருந்தது.
இப்போது செய்முறையை காண்போம்.


Samai Bisibelebath

தேவையான பொருட்கள் :
1/2 கப்சாமை அரிசி [ Little Millet ]
1/4 கப்துவரம் பருப்பு
1 சிட்டிகைமஞ்சத்தூள்
எலுமிச்சை அளவு புளி
10 - 15சின்ன வெங்காயம் [ சாம்பார் வெங்காயம் ]
1 சிறிய அளவுவெங்காயம், மெல்லியதாக நறுக்கவும்.
3 - 4பச்சை மிளகாய், நீளவாக்கில் கீறவும்
10 - 15கறுவேப்பிலை
1/4 கப்நூல்கோல் பொடியாக நறுக்கியது
1/4 கப்கத்தரிக்காய் பொடியாக நறுக்கியது
1/4 கப்முருங்கைக்காய் நறுக்கியது
1/4 கப்காரட் பொடியாக நறுக்கியது
1/4 கப்உருளை கிழங்கு பொடியாக நறுக்கியது
1/4 கப்பச்சை பட்டாணி [ optional ]
4 Tspசாம்பார் பொடி
2 Tspமல்லித்தூள்
1/4 Tspமஞ்சத்தூள்
3 Tspஉப்பு [ adjust ]
2 Tspபிசிபெளேபாத் பொடி
1/2 Tspமிளகாய் தூள் [ adjust ]
தாளிக்க :
1 Tspகடுகு
1/2 Tspபெருங்காய தூள்
2 Tspஎண்ணெய்
கடைசியில் தாளிக்க :
1 Tspநெய்
1/4 Tspமிளகாய் தூள்
1 Tspகடுகு
6 - 7கறுவேப்பிலை
கொத்தமல்லி தழை அலங்கரிக்க.
செய்முறை :
புளியை வெதுவெதுப்பான தண்ணீரில் ஊறவைக்கவும்.
சாமை அரிசி மற்றும் பருப்பை ஒரு பாத்திரத்தில் இட்டு இரு முறை கழுவி தண்ணீரை வடித்து விட்டு தனியே வைக்கவும்.
சமைக்க உபயோகிக்கப் போகும் குக்கரை தயாராக வைக்கவும்.

அடுப்பில் வாணலியில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் முதலில் கடுகை வெடிக்க விட்டு பின்னர் பெருங்காயம், கீறி வைத்துள்ள பச்சை மிளகாய், கறுவேப்பிலை மற்றும் சிறிய வெங்காயம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
கடைசியாக பெரிய வெங்காயம் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
வதக்கியவற்றை எடுத்து வைத்துள்ள குக்கரில் கொட்டவும்.

மீண்டும் அதே வாணலியை அடுப்பில் வைத்து அரை தேக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் கொடுக்கப்பட்டுள்ள பொடிகளை சேர்த்து அரை நிமிடம் பிரட்டி அதே குக்கரில் கொட்டவும்.
3 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
அடுப்பில் அதிக தீயில் வைத்து சூடாக்கவும்.
கழுவி வைத்துள்ள சாமை அரிசி மற்றும் பருப்பை சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
ஊறவைத்துள்ள புளியை 1/2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி குக்கரில் ஊற்றவும்.

ஒரு கரண்டியால் நன்கு கலக்கி விட்டு மூடி வெயிட் வைத்து மூன்று விசில் அடிக்கும் வரை வைக்கவும்.
பின்னர் தீயை குறைத்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு நீராவி அடங்குவதற்காக காத்திருக்கவும்.
ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறந்து ஒரு கனமான கரண்டியால் நன்கு மசித்த படி கலக்கி விடவும்.
உப்பு சரி பார்க்கவும்.
பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.

அடுப்பில் வாணலியை சூடாக்கி நெய் விட்டு கடுகு வெடிக்க விடவும்.
அடுத்து கறுவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விட்டு மிளகாய் தூளை சேர்த்து ஒரு சில மணித்துளிகள் வைத்திருந்த பின்னர் தயாராக உள்ள பிசிபெளேபாத்தின் மேல் கொட்டவும்.
கொத்தமல்லி தழையை தூவி அலங்கரிக்கவும்.
சூடாக இருக்கும் போதே சுவைத்தால்தான் ருசி அருமையாக இருக்கும்.
தயிர்பச்சடி அல்லது விருப்பமான கறியுடன் சுவைக்கலாம்.

Samai Bisibelebath


குறிப்பு :
பிசிபெளேபாத் பொடி கடைகளில் தயாராக கிடைக்கிறது.








மேலும் சில சாத வகைகள் செய்து சுவைக்க

கருவேப்பிலை சாதம் நெல்லிக்காய் சாதம் முருங்கைக்கீரை சாதம்
மணத்தக்காளி கீரை சாதம் தேங்காய் பால் காய்கறி புலாவ்







Tuesday, April 21, 2015

Sigappu-Poondu-Milagai-Chutney

#சிகப்புபூண்டுமிளகாய்சட்னி : இந்த சட்னி மிக மிக காரமும் பூண்டின் மணமும் உடைய சட்னி ஆகும். இட்லி, ஆப்பம், தோசை ஆகியவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.
சிகப்பு மிளகாய் வற்றல், பூண்டு இரண்டையும் உப்புடன் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.

சிகப்பு பூண்டு மிளகாய் சட்னி

தேவையான பொருட்கள் :
8 - 10சிகப்பு மிளகாய் வற்றல்
8 - 10 பூண்டு பற்கள்
20கறுவேப்பிலை
1/2 Tspஉப்பு [ adjust ]

செய்முறை :
முதலில் சிகப்பு மிளகாய் மற்றும் உப்பை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
அடுத்து பூண்டை சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்துக்கொள்ளவும்.
அதன் பின் கறுவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.
இப்போது 1/8 கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அவ்வப்போது திறந்து தேக்கரண்டியால் வழித்து விட்டு, தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
இட்லி, தோசை மற்றும் ஆப்பம் ஆகியவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
குளிர் சாதன பெட்டியில் இரண்டு மூன்று நாட்களுக்கு பத்திரப் படுத்தி வைக்கலாம்.
இந்த சட்னியின் நிறம் மிளகாயின் நிறத்தை பொருத்து அமையும்.




மேலும் சில கார சட்னி வகைகளின் குறிப்புகள்
வெங்காயம் சிகப்பு சட்னி >பூண்டு தக்காளி சட்னி >தக்காளி தொக்கு >வெங்காயம் தக்காளி சட்னி






Sunday, April 19, 2015

Semiya-Upma

#சேமியாஉப்புமா : மறுபடியும் உப்புமாவா என்று அலுத்துக்கொள்ள வேண்டாம். சரியான விகிதத்தில் தேவையான பொருட்களை சேர்த்து செய்தால் மிக மிக அருமையாக இருக்கும். பல விதமான காய்கறிகளை சேர்த்து செய்வதால் உடலுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கிடைக்கப் பெறுகிறது.
மற்ற #உப்புமா போலல்லாமல் சேமியா உப்புமாவிற்கு தண்ணீரின் அளவில் கவனம் தேவை. நான் இந்த உப்புமாவில் சேர்க்கக் கூடிய அனைத்து காய்கறிகளின் அளவை குறிப்பிட்டுள்ளேன். தங்களிடம் எந்தெந்த காய்கறிகள் இருக்கிறதோ அவற்றை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
வறுத்த சேமியா மற்றும் வறுக்காத சேமியா என இரு வகைகளில் கடைகளில் விற்கப்படுகிறது. இரண்டில் எந்த வகை வீட்டில் இருக்கிறதோ அதை பயன் படுத்தலாம். 
இனி செய்முறையை பார்ப்போம்.

சேமியா உப்புமா

தேவையான பொருட்கள் :
1 கப்சேமியா
வெங்காயம், பொடியாக நறுக்கவும்
2 or 3பச்சை மிளகாய், நீள வாக்கில் நறுக்கவும்
1/4 கப்காரட், பொடியாக நறுக்கியது
1/4 கப்பீன்ஸ், பொடியாக நறுக்கியது
1/4 கப்குடை மிளகாய், பொடியாக நறுக்கியது
1/4 கப்பச்சை பட்டாணி
8 - 10கறுவேப்பிலை
2 Tspகொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது
1/2 Tspஇஞ்சி அரைத்த விழுது [ விரும்பினால் ]
1 1/2 Tspஉப்பு [ அட்ஜஸ்ட் ]
தாளிக்க :
1/2 Tspகடுகு
1 Tspஉளுத்தம் பருப்பு
1 சிட்டிகைபெருங்காய தூள்
2 Tspஎண்ணெய்
1/2 Tspநெய்
செய்முறை :
அடுப்பில் வாணலியை சூடாக்கவும்.
வாணலியில் சேமியாவை போட்டு அரை தேக்கரண்டி நெய் விடவும்.
சாரணி கொண்டு விடாமல் வறுக்கவும்.
பொன்னிறமாக வறு பட்டவுடன் ஒரு தட்டில் எடுத்து தனியே வைக்கவும்.
அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்கவிடவும்.
அடுத்து உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை கரண்டியால் துழாவவும்.
பின்னர் பெருங்காய தூள் சேர்த்து கருவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதன் பின் வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அடுத்து இஞ்சி விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
அரிந்து வைத்துள்ள பீன்ஸ் மற்றும் காரட் சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
அடுத்து குடை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு அரை நிமிடம் வதக்கவும்.
பட்டாணியை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டிய பின்னர் 1 கப் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் தீயை குறைத்து வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து கிளறவும்.
ஒரு மூடி கொண்டு மூடி வேக விடவும்.
இரண்டு நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து கரண்டியினால் கிளறி விடவும்.
மறு படியும் மூடி மேலும் 3 நிமிடங்கள் வேக விடவும்.
3 நிமிடங்கள் கழித்து திறந்து சேமியா வெந்து விட்டதா என பார்க்கவும்.
சேமியாவை மசித்து விடாமல் நன்கு கிளறி விடவும்.
இன்னும் சிறிது வேக வேண்டும் என்றால் மேலும் இரண்டு நிமிடங்கள் மூடி போட்டு வேக விடவும்.

அடுப்பை அணைத்து விட்டு வாணலியை மூடியால் மூடி அடுப்பின் சூட்டிலேயே மேலும் 2 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
பின்னர் கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.
தொட்டுக்கொள்ள ஏதும் தேவை இல்லை. விருப்பப் பட்டால் தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் தொட்டுக் கொண்டு சுவைக்கலாம்.

Semiya Upma

குறிப்பு :
வறுத்த சேமியாவாக இருந்தால் அப்படியே உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.





மேலும் சில சமையல் குறிப்புகள் செய்து சுவைக்க
  • படத்தின் மீது அம்புக்குறியை வைத்தால் சமையல் குறிப்பின் பெயரை அறிந்துகொள்ளலாம்.
  • படத்தின் மேல் ஒரு முறை சொடுக்கினால் பதிவிற்கு செல்லலாம்.
அவல் உப்புமா எலுமிச்சை அவல் உப்புமா சைவ ஆம்லட்
பசலை கீரை பூரி சேமியா பாயசம் பாப்பரை அரிசி உப்புமா







இந்த சமையல் குறிப்பு மிகவும் உபயோகமாக இருப்பின் கீழே உள்ள கருத்துக்களை பதிவிடும் பெட்டியில் தங்களது கருத்தினை பதிவிடவும்.

மேலும் தங்களைப்போல மற்றவர்களும் பயனடைய கீழ உள்ள பொத்தான்கள் மூலமாக முகநூல்,  ட்விட்டர், பிண்டரஸ்ட், G+ போன்ற சமூக வலை தளங்களிலும் பகிரவும். நன்றி.



Friday, April 17, 2015

Chola Dosai

#சோளதோசை : #சோளம் புன்செய் பயிர்களில் ஒன்று மற்றும் #சிறுதானியம் வகையை சேர்ந்தது ஆகும். இந்தியாவில் மிக அதிகமாக விளைவிக்கப்படும் தானியம் ஆகும். இதனை கொண்டு சோள இட்லி, சோள குழிபணியாரம் ஆகியவை தயாரிக்கும் முறையை சென்ற பதிவுகளில் பார்த்தோம்.
அரிசி, சோளம் மற்றும் உளுந்து ஆகியவற்றை ஒன்றாக ஊற வைத்து மாவு அரைக்கும் இயந்திரத்தில் ஒன்றாக அரைத்து புளிக்க வைக்க வேண்டும்.
பின்னர் அவரவர் விருப்பப்படி மெத்து மெத்தென்றொ அல்லது முறுவலாகவோ தோசை சுட்டு சாப்பிடலாம்.
இனி செய்முறையை காண்போம்.

சோள தோசை

தேவையான பொருட்கள் :
ஊற வைக்க :
1 கப்சோளம்
1 கப்இட்லி அரிசி
1/2 கப்உளுத்தம் பருப்பு
1/2 Tspவெந்தயம்
மாவுடன் சேர்க்க :
2 Tbspரவா
2 Tspஉப்பு
தோசை சுடுவதற்கு தேவையான எண்ணெய்
செய்முறை :
ஊறவைக்க கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இரண்டு மூன்று முறை நன்றாக கழுவி விட்டு தேவையான தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

மூன்று மணி நேரம் கழித்து மாவு அரைக்கும் இயந்திரத்தை கழுவிய பிறகு ஊற வைத்த பொருட்களை போட்டு அரைக்கவும்.
அவ்வப்போது தண்ணீர் தெளித்து நன்கு மென்மையாக அரைத்து எடுத்து ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் வைக்கவும்.
உப்பு சேர்த்து நன்கு கைகளால் கலந்து வைக்கவும்.
6 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
அல்லது முதல் நாள் மாலை மாவு அரைத்து வைத்து மறுநாள் காலை தோசை ஊற்றலாம்.
மாவு புளித்த பிறகு ரவா சேர்த்து கலக்கி வைக்கவும்.
இட்லி மாவை விட தளர இருக்க வேண்டும்.
தேவையானால் சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி வைக்கவும்.
அரை மணி நேரம் ஊற விடவும்.
அரை மணி நேரம் கழித்து அடுப்பின் மேல் தோசை கல்லை வைத்து மிதமான தீயில் சூடேற்றவும்.
ஒரு சுத்தமான மெல்லிய துணியில் எண்ணெய் நனைத்து தடவவும்.
சரியான சூடானவுடன் மாவை தோசை கல்லின் நடுவில் வைத்து வட்டமாக பரப்பவும்.
தோசையின் மேல் சில துளிகள் எண்ணெய் தெளிக்கவும்.
தோசை ஓரம் சிவக்க ஆரம்பித்தவுடன் தோசை திருப்பியினால் திருப்பி போடவும்.
இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுத்து தட்டில் வைக்கவும்.
இதைபோல மீண்டும் மாவை பரப்பி தோசை சுட்டெடுக்கவும்.

சோள தோசை

சூடான சோள தோசையை தேங்காய் சட்னி அல்லது சாம்பார் தொட்டுக்கொண்டு சுவைக்கவும்.

சோள தோசை

ஹோட்டல் தோசை போல முறுகலாக வேண்டும் என்றால் தட்டையான கிண்ணம் கொண்டு மாவை தோசை கல்லின் மேல் மெல்லியதாக பரப்பி சிறிது தாராளமாக எண்ணெய் ஊற்றி பொன் முறுவலாக சுட்டு எடுக்கவும்.




மேலும் முயற்சி செய்ய 

சோள இட்லி
சோள இட்லி
சோள குழிபணியாரம்
சோள குழிபணியாரம்
ஓட்ஸ் தோசை
ஓட்ஸ் தோசை
நீர்தோசை
நீர்தோசை
முடக்கத்தான் தோசை
முடக்கத்தான் தோசை