Search This Blog

Monday, February 2, 2015

Noolkhol-Papaya-Sambar

#நூல்கோல்பப்பாளிசாம்பார் : எனது அண்டை வீட்டில் வசிக்கும் தோழி ஒருவர் அவர் இல்லத்தில் விளைந்த நூல்கோலை கொடுத்தார். பப்பாளி காய் ஒன்றும் வீட்டில் இருந்தது. இரண்டையும் சேர்த்து சாம்பார் செய்ய முடிவு செய்தேன்.
பப்பாளிகாயின் பலன்களை பற்றி சென்ற பதிவான பப்பாளி காரட் சாலட்   சமையல் குறிப்பில் பார்த்தோம். பச்சையாக சாலட் சாப்பிட விரும்பாதவர்கள் சாம்பார் மற்றும் கூட்டு போன்ற உணவு வகைகளில் சேர்த்துக் கொள்ளலாம்.
இனி செய்முறையை காண்போம்.

நூல்கோல் பப்பாளி சாம்பார்

தேவையான பொருட்கள் :
வேகவைத்த துவரம் பருப்பு                  : 1/3 Tbsp
நூல்கோல்                                                      : 1
பப்பாளிக்காய்  துண்டுகள்                       : 1/2 கப்
புளி                                                             : 1 சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டை
சின்ன வெங்காயம்                                : 8
பச்சை மிளகாய்                                      : 2
கருவேப்பிலை                                        : 10
கொத்தமல்லி கீரை                                : சிறிதளவு
சாம்பார் பவுடர்                                       : 2 Tsp
மஞ்சத்தூள்                                               : 1 சிட்டிகை
மல்லித்தூள்                                             : 1 Tsp
உப்பு                                                             : 2 Tsp

தாளிக்க :

எண்ணெய்                                                 : 1/2 Tsp
கடுகு                                                           : 1/2 Tsp
பெருங்காயம்                                            : சிறு துண்டு

செய்முறை :
சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து ஒன்றிரண்டாக அறிந்துகொள்ளவும்.
பச்சை மிளகாயை நீள  வாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கருவேப்பிலை , கொத்தமல்லி ஆகியவற்றை தனி தனியாக கழுவி ஆற வைக்கவும்.
நூல்கோலின்  தோலை நீக்கி ஒரே அளவு துண்டுகளாக அறிந்து கொள்ளவும்.

குக்கரில்  3/4  Cup நீர் சேர்க்கவும்.
அதில் நூல்கோலை 1 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
இறக்கியவுடன் ஆவியை உடனே வெளியேற்றவும்.
பருப்பை கரண்டியால் நன்கு மசித்து சேர்க்கவும்.
மறுபடியும் அடுப்பில் ஏற்றி சாம்பார் பவுடர் , மல்லி பொடி, மஞ்சத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். குறைந்த தீயில் கொதிக்கவிடவும்.


மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு முதலில் கடுகை வெடிக்க விடவும்.
பின் பெருங்காயம், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மற்றும் வெங்காயத்தை வரிசையாக போட்டு சிறிது வதக்கவும்.
வெங்காய வாசனை வந்தவுடன் கொதித்துகொண்டிருக்கும் சாம்பாரில்  கொட்டவும்.
வெட்டிவைத்துள்ள பப்பாளிகாயை சேர்க்கவும்.
குக்கரை மூடி வெயிட் வைத்து 1 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

நூல்கோல் பப்பாளி சாம்பார்

ஆவி நன்கு அடங்கியவுடன் குக்கரை திறந்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றவும்.

கொத்தமல்லி தழையினால் அலங்கரிக்கவும்.
சுவையான சாம்பார் தயார்.

நூல்கோல் பப்பாளி சாம்பார்


சூடான சாதத்தில் ஒரு கரண்டி சாம்பார் விட்டு பிசைந்து இஷ்டமான துவட்டலுடன் சாப்பிட்டால் ஆ.. ஆஹா... அதுவல்லவோ பேரானந்தம்!!

சாம்பாருடன் ஒன்றிரண்டு துளிகள் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் இன்னும் சுவையோ சுவை...!!

பருப்பு சாதத்திற்கு தொட்டு கொண்டு சாப்பிடலாம்.
சாதத்துடன் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிடும் போதும் சாம்பார் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.







No comments:

Post a Comment