Search This Blog

Saturday, October 18, 2014

Mixer

#மிக்ஸர் : வெகு நாட்களுக்கு முன்பு தீபாவளியின் பொது மிக்ஸர் செய்திருக்கிறேன். அதன் பிறகு சென்ற வாரம் செய்தேன்.
மிக்சரில் சேர்க்கப்படும் பெருங்காயத்தூள் மற்றும் வறுத்த கறுவேப்பிலை ஒரு தனி சுவையை மிக்ஸருக்கு கொடுக்கும்.
இங்கு ராய்ப்பூரில் கிடைக்கும் மிக்ஸரில் சாட் மசாலா கலந்திருப்பதை சாப்பிட்டால் மிக்ஸர் சாப்பிட்ட திருப்தியே இல்லாமல் இருக்கிறது.
அதனாலேயே நானே வீட்டில் செய்ய முயற்சி செய்தேன். அருமையாக இருந்தது.
இந்த அளவு சுமார் 2 முதல் 2 1/2 கப் மிக்ஸர் செய்ய முடியும்.
இனி எப்படி என பார்ப்போம்.


மிக்ஸர்


தேவையான பொருட்கள் :

ஓமப்பொடி செய்ய :
1/2 கப்                     கடலை மாவு [ Besan ]
1 Tbsp                       அரிசி மாவு
1 Tsp                         ஓமம் [ optional ]
1/4 Tsp                     உப்பு
2 சிட்டிகை          பெருங்காயம்
1/8 Tsp                     சிகப்பு மிளகாய் தூள்
1 சிட்டிகை           மஞ்சத்தூள்

காரா பூந்தி செய்ய :
1/2 கப்                    கடலை மாவு  [ Besan ]
2 Tbsp                       அரிசி மாவு
1/4 Tsp                     உப்பு
1 சிட்டிகை          மஞ்சத்தூள்
1 சிட்டிகை          பெருங்கயத்தூள்

மற்ற பொருட்கள் :
1/2 கப்                    சோள வத்தல் [ if available ]
1/4 கப்                 பொட்டுக்கடலை [ வறுகடலை ]
1/4 கப்                  நில கடலை [ Ground nuts ]
1/4 கப்                   கெட்டி அவல்  [ optional ]
15 - 20                    கறுவேப்பிலை

தூவுவதற்கு :
1 Tsp                      சர்க்கரை பொடித்தது
1/4 Tsp                   பெருங்கயத்தூள்
1 Tsp                      உப்பு [adjust]
1/2 Tsp                   சிகப்பு மிளகாய் தூள் [adjust]

2 கப்               எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை :
ஓமப்பொடி எவ்வாறு செய்வது என முன்பே பார்த்திருக்கிறோம்.

ஓமப்பொடி

அதில் கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை பின்பற்றி ஓமப்பொடி செய்து தனியே ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
நொறுக்கிக் கொள்ளவும்.

ஓமப்பொடி


அடுத்து காராபூந்தி செய்யும் முறை :

கடைசி ஈடு ஓமப்பொடி பொரிந்து கொண்டிருக்கும் போதே காரா பூந்திக்கு மாவு தயாரிக்க ஆரம்பித்து விடவும்.

காராபூந்தி  செய்ய கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு பேசினில் எடுத்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

Karaboondhi batter


ஓமப்பொடி செய்து முடித்த அதே காய்ந்து எண்ணெய் மீது சாரணி [ ஓட்டைகள் கொண்ட கரண்டி ] யை இடது கையால் பிடித்துக்கொள்ளவும்.
வலது கையினால் ஒரு கரண்டி மாவை எடுத்து சாரணி மீது விடவும்.
சாரணியை ஒரு தட்டு தட்டியோ அல்லது வலது கையில் உள்ள கரண்டியால் இலேசாக தேய்த்து விடவும்.
ஓட்டைகளின் வழியே மாவு கீழே உள்ள சூடான எண்ணெயில் விழுந்து பொறியும்.
ஒரு தடவைக்கு ஒரு கரண்டி மாவு மட்டுமே சாரணி மேல் ஊற்றி தேய்க்க வேண்டும்.
சிவக்க வறுத்தெடுத்து எண்ணெய் வடிய டிஷ்யு தாளின் மீது வைக்கவும்.


மாவு உள்ள வரை இதே போல எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

எண்ணெய் வடித்த பிறகு ஒமப் பொடி எடுத்து வைத்துள்ள பாத்திரத்திற்கு மாற்றவும்.

அடுத்து சோள வத்தலை பொரித்தெடுக்கவும். வறுத்தெடுத்து எண்ணெய் வடித்து எடுத்து இதனையும் ஓமப்பொடி மற்றும் காராபூந்தி உள்ள பாத்திரத்தில் சேர்க்கவும்.


நில கடலை, பொட்டுக்கடலை, கறுவேப்பிலை ஆகிய அனைத்தையும் தனித்தனியாக பொரிதெடுத்து சேர்க்கவும்.


அவல் எடுத்திருந்தால் அதனையும் பொரித்துக்கொள்ளவும்.

தூவுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் அவரவர் ருசிக்கேற்ற படி தூவி கலந்து விடவும்.

மிக்ஸர் மிக்ஸர்

காற்றுப்புகா பாத்திரத்தில் எடுத்து வைத்து பத்திர படுத்தவும்.


மிக்ஸர்

மாலை நேரத்தில் காபி அல்லது தேநீருடன் சுவைக்க ஏற்றது.
இது தீபாவளி பலகாரங்களில் ஒன்றாகும்.

No comments:

Post a Comment