Search This Blog

Friday, August 29, 2014

Modhakam - Dumpling

#மோதகம் - #கொழுக்கட்டை : இன்று விநாயகர் சதுர்த்தி தினம். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்.  மோதகம் செய்து விநாயகரை வழிபட்டு கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
நான் மோதகம் செய்து கடவுளுக்கு படைத்து நாங்களும் சுவைத்து மகிழ்ந்தோம்.
இனி மோதகம் எவ்வாறு செய்யப்பட்டது என இங்கு காணலாம்.



தேவையான பொருட்கள் :
1/2 கப்                               அரிசி மாவு [ dry rice flour ]
3/4 கப்                               தண்ணீர்
1/4 Tsp                                உப்பு
1 Tsp                                  நெய்
1 Tsp                                  நல்லெண்ணெய்

மாவினுள் வைத்து மோதகம் - கொழுக்கட்டை செய்ய தேவையான பூரணம்.

செய்முறை :
மாவில் உப்பு, நெய், நல்லெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கையினால் பிசறி விடவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கவும்.
பாத்திரத்தின் அடியில் சின்ன சின்ன குமிழ்கள் தோன்ற ஆரம்பித்து கொதி நிலைக்கு சற்று முன்னதாக அடுப்பை நிறுத்தி விடவும்.

இந்த சூடான தண்ணீரை மாவில் ஊற்றி கரண்டியால் கலக்கவும்.
தேவையான தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.


கை பொறுக்கும் சூடு ஆறியபின் கையால் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

இரண்டு கைகளிலும் எண்ணெய் தடவிக்கொண்டு ஒரு உருண்டை மாவை இடது உள்ளங்கையில் வைத்து வலது கையினால் தட்டையாக தட்டவும்.
அதன் நடுவே ஒரு உருண்டை பூரணத்தை வைத்து சுற்றி மாவினால் மூடவும்.


மேலே கைகளால் அழுத்தி மேல் மாவில் ஓட்டைகளோ விரிசலோ இல்லாதவாறு மூடவும்.

தேவையான கொழுகட்டைகளை செய்து இட்லி தட்டின் மேல் எண்ணெய் தடவி அடுக்கவும்.


இட்லி பானையில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் கொழுகட்டைகளை இட்லி பானையினுள் வைத்து ஆவியில் 3 முதல் 5 நிமிடங்கள் வேக விடவும்.


வெந்த பிறகு வெளியில் எடுத்து பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து அடுக்கவும்.

மேல் மாவு ஏற்கனவே சுடு தண்ணீர் விட்டு பிசைந்துள்ளதால் மிகக் குறைந்த நேரமே வேக வைத்தால் போதுமானது.


தேவையான நேரத்திற்கு மேல் வேக வைத்தால் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் வெல்ல பூரணம் தண்ணீர் விட ஆரம்பித்து விடும்.

இதே போல மாவினுள் கார பூரணத்தையும் வைத்து வேக விட்டு எடுக்கவும்.

பகவானுக்கு படைத்து இறை அருள் பெற்றபின் புசிக்கவும்!!

குறிப்பு :
கையில் தட்ட விருப்பப்படாதவர்கள் எண்ணெய் தடவிய இரு பிளாஸ்டிக் தாள்களின் நடுவே மாவை வைத்து தட்டையான கிண்ணத்தினால் அழுத்தி வட்ட வடிவமாக செய்த பின் மேலே கூறியுள்ள படி நடுவே பூரணம் வைத்து கொழுகட்டைகளாக்கவும்.








மேலும் சில சமையல் குறிப்புகள் 
முயற்சி செய்து பார்க்க

மோதகம்
மோதகம்
தேங்காய் பூரணம்
தேங்காய் பூரணம்
சோயா பூரணம்
சோயா பூரணம்
சோயா பூரண போளி
சோயா பூரண போளி
ஜவ்வரிசி சேமியா பாயசம்
ஜவ்வரிசி சேமியா பாயசம்
அமராந்தம் கொழுக்கட்டை
அமராந்தம் கொழுக்கட்டை




No comments:

Post a Comment