Search This Blog

Friday, July 25, 2014

Rasagulla

#ரசகுல்லா [ #Rasagulla ] : இந்த இனிப்பு வகை கொல்கத்தாவில் மிக மிக பிரசித்தமானது. பாலை திரித்து செய்யப்படும் பன்னீரை கொண்டு செய்யப்படும் இனிப்பாகும்.
சுமார் 20 வருங்களுக்கு முன் நான் பெங்களூரில் வசித்த போது ஒரு பெங்காலி பெண்மணியிடம் இதன் செய்முறையை கற்றறிந்தேன்.
இப்போது எவ்வாறு செய்வது என காண்போம்.


தேவையான பொருட்கள் :
1 லிட்டர்                                     பால்
2 - 3 Tbsp                                       வினிகர் / எலுமிச்சை சாறு
1/2 Tsp                                            ரவா

சர்க்கரை பாகிற்கு :
1 1/2 கப்                                       சர்க்கரை
3 1/2 கப்                                       தண்ணீர்

செய்முறை :
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை காய்ச்சவும்.
பால் பொங்கியதும் அடுப்பை அணைத்து விடவும்.
ஐந்து நிமிடங்கள் காத்திருக்கவும்.
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு  1 Tbsp வினிகர் / எலுமிச்சை சாறு சேர்த்து கரண்டியால் கலக்கவும்.


பால் இலேசாக திரிய ஆரம்பிக்கும்.
மேலும் 1 Tbsp  வினிகர் / எலுமிச்சை சாறு  விட்டு கலக்கவும்.


பால் நன்கு திரிந்து தண்ணீர் சிறிது வெளிர் பச்சை நிறமாக மாறினால் போதுமானது.


இல்லையென்றால் சிறிது வினிகர் / எலுமிச்சை சாறு  சேர்த்து கலக்கி நன்கு திரிய விடவும்.
திரிந்த பாலை அப்படியே 5 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

பின்னர் ஒரு துணியின் வழியே மற்றொரு பாத்திரத்தினுள் வடிகட்டவும்.
வடிகட்டிய தண்ணீர்  வே [ whey ] என்று கூறப்படுகிறது.


இது புரோட்டீன் நிறைந்தது.
அதனால் கீழே கொட்ட வேண்டாம்.
சாதம் சமைக்க, சப்பாத்தி மாவு பிசைய போன்றவற்றிற்கு பயன் படுத்திக் கொள்ளலாம்.

துணியின் நுணியை கட்டி பாத்திரம் விளக்கும் தொட்டியின் மேல் வே முழுவதுமாக வடிவதற்காக தொங்க விடவும்.
சுமார் 1 அல்லது 2 மணி நேரம் அப்படியே தொங்க விட்டு வெ முழுவதுமாக நீங்கிய பன்னீரை பெறவும்.

நன்கு வாடி கட்டிய இந்த பன்னீரை ஒரு தட்டில் கொட்டவும்.


நன்கு கைகளால் அழுத்தி பிசையவும்.
ரவாவையும் சேர்த்து நன்கு பிசையவும்.


அடுப்பில் குக்கரை வைத்து சர்க்கரை போட்டு தண்ணீர் விட்டு சூடாக்கவும்.


சர்க்கரை கரையும் வரை கரண்டியால் கலக்கவும்.
பிறகு கொதிக்க விடவும்.

சர்க்கரை பாகு கொதிப்பதற்குள் ஒரே அளவு உருண்டைகளாக உள்ளங்கைகளுக்கு நடுவே வைத்து அழுத்தி விரிசல் வராமல் உருட்டி வைக்கவும்.

சர்க்கரை பாகு கொதிக்க ஆரம்பித்ததும் உருட்டிய உருண்டைகளை சேர்க்கவும். குக்கரை மூடி வெயிட் பொருத்தவும்.



ஒரு விசில் வந்த பிறகு சிறிய தீயில் 7 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
7 நிமிடங்கள் ஆனதும் அடுப்பை அணைத்து விட்டு குக்கரை தண்ணீர் குழாய் அடியில் வைத்து தண்ணீர் திறந்து விட்டு ஆவியை போக்கவும்.
இப்போது குக்கரை திறந்தால் சுவையான ரசகுல்லா  ரெடி.
உருண்டைகள் அனைத்தும் இரு பங்காக பெருத்திருக்கும்.


என்ன இன்னுமா காத்திருக்கிறீர்கள் ??!! ஒரு கிண்ணத்தில் எடுத்து ஜீராவுடன் சுவைக்க சொல்லவா வேண்டும்!!!!!
















No comments:

Post a Comment