Search This Blog

Tuesday, July 29, 2014

Broken Wheat Coriander Pongal

#கோதுமைரவா #கொத்தமல்லி #பொங்கல் : கொத்தமல்லி ஒரு பெரிய கட்டு மார்கட்டிலிருந்து வாங்கி வந்து விட்டேன். சட்னி மற்றும் துவையல் அரைத்த பின்னரும் மீதி இருந்தது. என்ன செய்யலாம் என யோசித்த போது,....  காலை உணவிற்கு பொங்கலுடன் கொத்தமல்லியையும் சேர்த்து செய்யலாமே என முடிவு செய்தேன்.
இனி எப்படி என பார்க்கலாம்.



தேவையான பொருட்கள் :
3/4 கப்                                         கோதுமை ரவா
1/4 கப்                                         பயத்தம் பருப்பு
2                                                   பச்சை மிளகாய், கீறி வைக்கவும்
5 - 6 பற்கள்                              பூண்டு, பொடியாக நறுக்கவும்
1/2 அங்குல                              இஞ்சித்துண்டு, நசுக்கிகொள்ளவும்
1 Tsp                                            சீரகம்
1 Tsp                                            மிளகு
1 1/2 Tsp                                      உப்பு [ அட்ஜஸ்ட் ]

தாளிக்க :
1 Tsp                                             சீரகம்
1 Tsp                                             மிளகு
10 - 15                                          கறுவேப்பிலை
2 Tsp                                             முந்திரி பருப்பு துண்டுகள்
1 Tsp                                              நெய்
1 Tsp                                              நல்லெண்ணெய்

அலங்கரிக்க கொத்தமல்லி தழை சிறிது.

செய்முறை :
குக்கரில் கோதுமை ரவாவையும் பருப்பையும் எடுத்துக்கொள்ளவும்.
இரு முறை நீர் விட்டு கழுவிக்கொள்ளவும்.
நீரை வடித்து விட்டு 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
பின்னர் கொடுக்கப்பட்டுள்ள மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலக்கி விடவும்.


குக்கரை மூடி வெயிட் வைக்கவும்.
அடுப்பில் அதிக தீயில் 3 விசில் வரும் வரை வேக விடவும்.
பின்னர் தீயை குறைத்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
ஆவி அடங்கிய பின்னர் திறக்கவும்.


ஆவி அடங்குவதற்குள் மற்றொரு அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து எண்ணெய் மற்றும் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
சீரகத்தை வெடிக்க விட்ட பின்னர் மிளகு சேர்த்து பொரிந்தவுடன் கறுவேப்பிலை சேர்க்கவும். கறுவேப்பிலை பட படவென பொரிந்து அடங்கிய பின்னர் பொங்கலின் மேல் கொட்டவும்.
அதே வாணலியில் முந்திரியையும் சிவக்க வறுத்து சேர்க்கவும்.
நன்கு கரண்டியால் கிளறி விடவும்.
உப்பு சரி பார்க்கவும்.தேவையானால் சிறிது சேர்த்து கிளறவும்.

சூடாக இருக்கும் போதே பரிமாறும் தட்டில் இட்டு கொத்தமல்லி சட்னி அல்லது தேங்காய் சட்னி அல்லது பொங்கல் துவையலுடன் சுவைக்கவும்.






No comments:

Post a Comment