Search This Blog

Tuesday, March 25, 2014

Sprouted Green Gram Stir Fry

#முளைகட்டியபயறுபொரியல் - #பயறுசுண்டல் : #பயறு வகைகளை முளை கட்டுவதால் பயறின் புரோட்டீன் சத்து அதிகரிக்கிறது. புரோட்டீன் சத்து உடலுக்கு மிக மிக அவசியமான ஒன்றாகும். மாமிச உணவை எடுத்துகொள்ளாதவர்களுக்கு முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறு மூலமாகவே அந்த சத்து கிடைக்கிறது.
பயறை எட்டு முதல் பத்து மணி நேரம் ஊற வைத்து பின்னர் தண்ணீரை வடித்து விடவும். ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு வைத்திருக்கவும்.
இரவு முழுவதும் இவ்வாறு வைத்திருந்து மறு நாள் காலை பார்த்தால் சிறிய சிறிய முளை வந்திருப்பதை காணலாம். இன்னும் சிறிது நீளமாக முளைக்க வைக்க வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும். முளை கட்டிய பிறகு உடனே உபயோகப் படுத்த போவதில்லை என்றால் குளிர் சாதன பெட்டியில் பத்திர படுத்தவும். குளிர் சாதன பெட்டியில் வைத்திருந்தாலும் ஒரு நாளைக்கு ஒரு முறை தண்ணீர் தெளிக்க வேண்டும். அல்லது ஒரு முறை கழுவி விட்டு நீரை வடித்து விட்டு மூடி வைக்க வேண்டும்.
மேலும் கடைகளில் முளை கட்டுவதற்கு என்றே சாதனங்கள் கிடைக்கின்றன. அதையும் உபயோகப் படுத்தலாம்.
இப்போது பயறு சுண்டல் எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

பயறு சுண்டல்

தேவையான பொருட்கள் :
1 கப்                                          முளைகட்டிய பயறு
1/4 கப்                                        பசலை கீரை பொடியாக அறிந்தது
1 Tbsp                                         காரட் துருவியது
1 Tbsp                                         குடை மிளகாய், பொடியாக நறுக்கியது
2 பற்கள்                                  பூண்டு, நசுக்கிக் கொள்ளவும்

தாளிக்க :
1/2 Tsp                                        கடுகு
1 அ 2                                         சிவப்பு மிளகாய்
1 Tsp                                           உளுத்தம் பருப்பு
2 சிட்டிகை                             பெருங்காய தூள்
1 Tsp                                           எண்ணெய்

செய்முறை :
அடுப்பில் சிறிய தீயில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சூடானதும் கடுகை வெடிக்க விடவும். பின்னர் சிகப்பு மிளகாயை ஒன்றிரண்டாக உடைத்து போடவும். உடனே உளுத்தம் பருப்பையும் சேர்த்து  சிவக்க வறுக்கவும்.
இப்போது பூண்டை தட்டி போட்டு சிறிது வதக்கிய பின்னர் குடை மிளகாய் மற்றும் காரட் துருவலை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
அதன் பின் முளைகட்டிய பயறை சேர்த்து உப்பை போட்டு ஒரு கிளறு கிளறி மூடி போட்டு இரண்டு நிமிடங்கள் வேக விடவும். அதிக நேரம் வேக வைத்து காய் மற்றும் பயறின் நிறத்தை மாற்றி விட கூடாது.
கடைசியாக கீரையை சேர்த்து சில மணித்துளிகள் வதக்கி விட்ட பின் அடுப்பை நிறுத்தி விடவும்.

பரிமாறும் கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
மாலை சிற்றுண்டியாகவோ அல்லது சாம்பார் அல்லது ரசம் சாதத்துடன் தொட்டு கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.




மேலும் சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

கொள்ளு சுண்டல்
கொள்ளு 
சுண்டல்
கொண்டக்கடலை சுண்டல்
கொண்டக்கடலை சுண்டல் 


No comments:

Post a Comment