Search This Blog

Wednesday, January 29, 2014

Nellikkai Urugai

#நெல்லிக்காய்ஊறுகாய் : #நெல்லிக்காய் வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்த கனியாகும்.
நெல்லிக்காயை எத்தனை நாள் வெயிலில் உலர்த்தினாலும் இதன் குணமும், சுவையும் சற்றும் மாறுவதில்லை. இதனை பற்றி மேலும் அறிய 

நெல்லிக்காய்.

இங்கு நெல்லிக்காயை பயன் படுத்தி ஊறுகாய் எவ்வாறு செய்யலாம் என காண்போம்.

நெல்லிக்காய்ஊறுகாய்


தேவையான பொருட்கள் :


7 அ 8                                            நெல்லிக்காய்
2 நெல்லி அளவு                     புளி, தண்ணீரில் ஊறவைக்கவும்.
1 சிறு துண்டு                           பெருங்காயம்
1 Tsp                                              கடுகு
1/4 Tsp                                           மஞ்சத்தூள்
2 Tsp [அட்ஜஸ்ட் ]                   மிளகாய் தூள்
2 Tsp                                              உப்பு
1/2 Tsp                                          வெந்தயம்
1 Tsp                                             பச்சை மல்லி விதை ( இருந்தால் )
6 Tsp                                             நல்லெண்ணெய்

செய்முறை :
நெல்லிக்காயை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில் 1 கப்  தண்ணீர் விட்டு அதில் இந்த பாத்திரத்தை வைத்து மூடி விடவும்.


வெயிட் பொருத்த வேண்டாம்.
அடுப்பில் அதிக தீயில் முதலில் சூடேற்றவும்.
ஆவி வர ஆரம்பித்ததும் தீயை குறைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக விடவும்.
பிறகு வெளியில் எடுத்து நடுவில் உள்ள கொட்டையை நீக்கி விடவும்.
சூடு ஆறிய பின் மிக்சியில் அறைத்தெடுத்து  தனியே வைக்கவும்.
புளியை மிக குறைந்த தண்ணீர் விட்டு கரைத்து கெட்டியான கரைசலாக பிழிந்து எடுத்து தனியே வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெந்தயத்தை வறுத்து பொடி செய்து தனியே வைக்கவும்.


அடுப்பில் உள்ள அதே  வாணலியில் மீதமுள்ள  எண்ணெயை  விட்டு சூடாக்கவும். சூடானதும் கடுகை வெடிக்க விடவும். பிறகு பெருங்கயத்தை பொரிய விடவும்.
மஞ்சத்தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காயை சேர்த்து 5 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும்.
இப்போது  உப்பு மற்றும்  மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
அதன் பின் புளி கரைசலை விட்டு கிளறி விடவும்.
அவ்வப்போது அடி பிடிக்காமல் இருக்க கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.
புளி தண்ணீர்  சுண்டியதும் பச்சை கொத்தமல்லி விதைகளை சேர்க்கவும்.
கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.

சிறிது நேரம் கழித்து ஊற்றிய எண்ணெய் வெளியே கக்க ஆரம்பிக்கும்.
ஊறுகாயும் வாணலியில் ஒட்டாமல் உருண்டு வரும்.
அந்த நேரத்தில் பொடித்து வைத்துள்ள வெந்தயத்தை சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

நன்கு ஆறிய பின் ஒரு பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
குளிர் சாதன பெட்டியில் வைத்து பத்திரப் படுத்தலாம்.






சில சமையல் குறிப்புகள் முயற்சி செய்து பார்க்க

நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் தயிரில் ஊறியது
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் மிட்டாய்
நெல்லிக்காய் புதினா துவையல்
நெல்லிக்காய் புதினா துவையல்
தேன் நெல்லிக்காய்
நெல்லிக்காய் தேனில் ஊறியது
நெல்லிக்காய் சட்னி
நெல்லிக்காய்
சட்னி


No comments:

Post a Comment